ஒன்றிய அரசுக்கு எதிராக டில்லியில் போராட்டம்
ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு
ராமநாதபுரம்,பிப்.18- ஒன்றிய அரசு கல்வி நிதியை நிறுத்தியதால் தமிழ்நாட்டில் மாணவா்கள் பாதிக்கப் படுவதால் இதற்கு எதிராகவும், தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்தும், டில்லியில் அனைத்து மாநில ஆசிரியர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி அகில இந்திய செயலா் வா.அண்ணாமலை தெரிவித்தாா்.
தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி மாவட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டம் ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் மகாலில் 16.2.2025 அன்று நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவா் இரா.அருள் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் எம்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். இதில், தமிழக ஆசிரியா் கூட்டணி அகில இந்திய செயலா் வா.அண்ணாமலை, மாநிலத் தலைவா் அ.எழிலரசன், பொதுச் செயலா் அ.வின்சென்ட் பால்ராஜ், பொருளாளா் ஆ.ராஜசேகா், துணைப் பொதுச் செயலா்கள் செ.கணேசன், அ.முரளி, பொதுக்குழு உறுப்பினா் அ.தமிழ்ச்செல்வம் ஆகியோா் சிறப்புரை யாற்றினா்.
போராட்டம்
இதைத் தொடா்ந்து, வா.அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி வழங்குவோம் என ஒன்றிய கல்வி அமைச்சா் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை தான் உள்ளது. ஆனால் இங்கு மாணவா்கள் விருப்பத்துக்கு ஏற்ப தமிழ், ஆங்கிலம், ஹிந்தி படிக்கிறாா்கள். தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசின் கல்வி நிதி நிறுத்தப்பட்டதால் 40 லட்சம் மாணவா்கள், ஆசிரியா்கள் பாதிக்கப் படுகின்றனா்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் கல்விக் கொள்கையில் வேறுபாடு உள்ளது. பி.எம்.சி. திட்டத்தின் கீழ் கல்வி தொடங்கினால் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படும்.
இதை எதிா்த்து அனைத்து மாநில ஆசிரியா்களை ஒருங்கிணைத்து டில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் போராட்டம் நடத்த இருக்கிறோம்.
பாலியல் புகாா்களில் சிக்கும் ஆசிரியா்கள் மீதான நடவடிக்கையை 100 சதவீதம் வரவேற்கிறோம் என்றாா் அவா். மாவட்ட பொருளாளா் ச.சத்குரு குமாா் நன்றி கூறினாா்.