கரூர் கழக செயல்வீரர் க.நா. சதாசிவம் அவர்களுக்கு இரங்கல்

1 Min Read

கரூர் நகர திராவிடர்கழகத் தலைவர் செயல் வீரர் க.நா. சதாசிவம் (வயது 74) நேற்றிரவு மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
கழகம் நடத்திய போராட் டங்களில் எல்லாம் கலந்து கொண்டவர். கழகத் தோழர்கள், இனவுணர்வாளர் களைக் காணும் போதெல்லாம் கழகக் கொடி பொறித்த பேனாக்களை அளித்து மகிழ்பவர்.
கரூர் நகரில் பல தரப்பட்ட மக்களாலும் அறியப்பட்டவர். அவர்தம் மறைவு கரூர் கழகத்திற்குப் பேரிழப்பாகும். அவர் பிரிவால் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ள அவரது வாழ்விணையர் சவுந்தர நாயகி அம்மையாருக்கும், மகள்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
16.2.2025 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *