நீண்ட காலப்பிரச்சினைக்குத் தீர்வு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புகின்றனர்

viduthalai
1 Min Read

வாசிங்டன், பிப். 14- விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் ஆய்வுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பன்னாட்டு விண்வெளி ஆய்வு மய்யத்திற்கு சென்றனர். போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் இருவரும் 8 நாள் பயணமாக விண்வெளி மய்யத்துக்கு சென்றநிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பன்னாட்டு விண்வெளி மய்யத்திலேயே சிக்கி உள்ளனர். அவர்களை

பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இருவரும் விரைவில் பூமிக்கு திரும்புவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வருகின்ற மார்ச் மாதம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 12ஆம் தேதி ஏவப்படும் க்ரூ-10 டிராகன் விண்கலம் மூலம் சுனிதா, வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே விண்வெளியில் அதிக நேரம் நடைபயணம் செய்த பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். சுனிதா 5 மணி நேரம் 26 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார். 9ஆவது முறையாக விண்வெளியில் நடந்துள்ள சுனிதா வில்லியம்ஸ் இதுவரை விண்வெளியில் மட்டும் 62மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்திருக்கிறார். புட்ச் வில்மோருக்கு இது அய்ந்தாவது நடைப்பயணமாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *