மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தரவுகளை அழிக்கக் கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

viduthalai
1 Min Read

புதுடில்லி,பிப்.13- ஏ.சி.ஆர் என்ற தனியார் தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள மெமரி சிப் மற்றும் மைக்ரோ கண்ட்ரோலர் ஆகிய கருவிகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததற்குப் பிறகு அதில் உள்ள தரவுகள் எவ்வாறு அகற்றப்படுகிறது என்பது குறித்து புதிய கொள்கையை உருவாக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பிறப்பித்த உத்தரவில், தற்போதைக்கு எந்த ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்தும் எந்த ஒரு தரவுகளையும் அகற்ற வேண்டாம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் அந்த தரவுகளை அகற்றுவதில் எத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

புனேவில் ஜி.பி.எஸ். தொற்றால்
7 பேர் மரணம்: 167 பேர் பாதிப்பு

புனே, பிப்.13- புனேவில் ஜிபிஎஸ் தொற்றால் 7 பேர் உயிரிழந்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராட்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் ஜி.பி.எஸ். எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் எனப்படும் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. இது நரம்பு மண்டலம் பாதிப்பில் தொடங்கி, தசை பலவீனம் மற்றும் முடக்கம் போன்ற பல்வேறு அறிகுறிககாணப்படுகின்றன

மகாராஷ்டிர நல்வாழ்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “ஜி.பி.எச். பாதிப்புக்கான சந்தேகத்தின் அடிப்படையில் மொத்தம் 192 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இதுவரை 167 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது”
இவ்வியாதிக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு இந்த ஜி.பி.எஸ். பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்ற 6 பேரின் நிலையும் சந்தேக பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *