என்னே விநோதம்: பத்மசிறீ விருது பெற்றதிலும் ஆள் மாறாட்டமாம்!

viduthalai
1 Min Read

புதுடில்லி, பிப். 13 பத்மசிறீ விருது பெற்றதில் ஆள் மாறாட்டம் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஒரே பெயரைக் கொண்ட 2 பேருக்கும் ஒடிசா உயர்நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது.

தனக்கு அறிவிக்கப் பட்ட பத்மசிறீ விருதை தன் பெயரை வைத் துள்ள மற்றொருவர் வாங்கி விட்டதாக, ஒடிசாவைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இலக்கியம் மற்றும் கல்வி பிரிவில் ஆற்றிய சேவைக்காக கடந்த 2023-ஆம் ஆண்டுக்கான பத்மசிறீ விருது, ஒடிசாவைச் சேர்ந்த அந்தர்யாமி மிஸ்ரா என்பவருக்கு அறி விக்கப்பட்டது. இதன்படி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், ஒடிசாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் அந்தர்யாமி மிஸ்ராவுக்கு அந்த விருதை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

ஆள் மாறாட்டம்

இது தொடர்ப்பாக, ஒடிசாவைச் சேர்ந்த அந் தர்யாமி மிஸ்ரா மனுவில் அவர் கூறியுள்ளதாவது: டாக்டரான நான், ஒடியா உட்பட பல மொழிகளில், 29-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளேன். இதன் படியே என் பெயருக்கு விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு புத்தகம் கூட எழுதாத பத்திரி கையாளரான அந்தர்யாமி மிஸ்ரா அந்த விருதை வாங்கியுள்ளார். என் பெயரை கொண்ட அவர் ஆள்மாறாட்டம் செய்து விருதை பெற்றுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை இதை விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் 24-ஆம் தேதி, இரண்டு அந்தர் யாமி மிஸ்ராவையும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. இதில், உண்மையில் யாருக்கு விருது அறிவிக் கப்பட்டது என்பது தொடர்பாக விளக்கும்படி ஒன்றிய அரசுக்கு தாக்கீது (நோட்டீஸ்) அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *