கும்பமேளாவில் தொடர்ந்து சாவுகள்: நாடு முழுவதும் கண்டனங்கள் வலுக்கின்றன!

Viduthalai
4 Min Read

புதுடில்லி, பிப்.13 உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் நீராடச் சென்ற பலர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அதற்குப் பிறகும் தொடர் உயிரிழப்புகளால் நாடு முழுவதும் கண்டனங்கள் வலுக்கின்றன.
செய்தி விவரம் வருமாறு:

கும்பமேளா துயரச் சம்பவம் வருத்தமளிக்கிறது:
ராகுல் காந்தி

இந்தியா
‘‘பிரயாக்ராஜ் மகா கும்பமேளா வில் ஏற்பட்ட கூட்ட நெரிச லில் பலர் பலி யானதும், பலர் காயமடைந் துள்ள செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது’’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மக்க ளவை உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13 ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் 11.2.2025 வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் நீராடி யுள்ளனர்.
மவுனி அமாவாசையான ஜனவரி 29 ஆம் தேதியன்று திரிவேணி சங்கமத்தில் ‘புனித’ நீராடச் சென்ற பக்தர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுபற்றி ராகுல் காந்தி தன்னுடைய ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளி யிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பிரயாக்ராஜ் மகா கும்ப மேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். தவறான நிர்வாகம், கட்டுப்பாடின்மை மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பதிலாக விஅய்பிகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்தியது ஆகியவைதான் இந்தத் துயர நிகழ்விற்குக் காரணம்.
கும்பமேளாவிற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் பல இடங்களில் நீராடல்கள் நடைபெற இருக்கின்றன. விஅய்பி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தி, பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அரசு சிறந்த ஏற்பாடுகளை செய்து, இது போன்ற துயர சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு தனது நிர்வாகத் திறனை மேம்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவு மாறு காங்கிரஸ் தொண்டர்களையும்ல தலை வர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை வெளியிடாதது ஏன்?
மக்களவையில் அகிலேஷ் கேள்வி
‘மகா கும்பமேளாவில் நிர்வாகச் சீர்கேடு களால் கூட்ட நெரிசலில் சிக்கி உயி ரிழந்தோ ரின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அதி காரபூர்வமாக வெளியிடாதது ஏன்?’ என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கேள்வி எழுப்பி னார்.
மேலும், எண்ம மயமான கும்பமேளா என விளம்ப ரங்களை வெளியிட்டுவிட்டு உயிரி ழந்தோரின் எண்ணிக்கை குறித்த முழுத் தரவுகளை தற்போது வரை வெளியிடாமல் இரட்டை என்ஜின் ஆட்சி எனக் கூறிக்கொண்டு உத்த ரப்பிரதேச மாநில அரசும், ஒன்றிய அரசும் இரட்டைத் தவறுகளை செய்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நிலவுக்குப் பயணிப்பதால்
என்ன பயன்?
பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மக்கள வையில் அவர் மேலும் பேசியதாவது:
முதல்முறையாக கும்பமேளாவில் 300 கி.மீ. தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை நோக்கி பயணிப்பதாக கூறும் அரசால் போக்குவரத்து நெரிசலைக் கூட முறையாக கட்டுப்படுத்த இயலவில்லையா? பூமியில் உள்ள தேவைகளை நிறைவேற்றாமல் நிலவுக்குப் பயணிப்பதால் என்ன பயன்?
எண்ம மயமாக்கப்பட்ட கும்பமேளா என வெகுவிமரிசையாக விளம்பரங்கள் வெளி யிடப்பட்டன. ஆனால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ட்ரோன்களை (ஆளில்லா விமா னங்கள்) ஏன் பயன்படுத்தவில்லை?

பணக்காரர்களுக்கான
பட்ஜெட்
அண்மையில் ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சாமானியர்களுக்கானது அல்ல; பெரும் தொழிலதிபர்களுக்கும், பணக்கா ரர்களுக்கும் சலுகைகள் வழங்குவதற்கான பட்ஜெட். நாட்டின் வளத்தில் பெரும்பகுதி குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே உள்ளதை 80 கோடி பேருக்கு பொது விநியோக முறையின்கீழ் ரேசன் பொருள்கள் வழங்கப்படுவதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது என்றார்.
உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜில் நடை பெற்றுவரும் மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதியன்று மவுனி அமாவாசை ‘புனித’ நீராடலின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்த மாநில அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பலி எண்ணிக்கையை மறைக்கிறது பா.ஜ.க. அரசு: மம்தா
இந்தியா

மேற்குவங்காள மாநில சட்டசபை யில் நேற்று (12.2.2025) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பிறகு முத லமைச்சர் மம்தாசெய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மேற்குவங்காளத்துக்கு சட்டப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை.
பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் பலியானார்கள். ஆனால், சாவு எண்ணிக்கையை உத்தரப்பிரதேச பாரதீய ஜனதா அரசு சரிவர வெளியிடவில்லை. பலியானோர் எண்ணிக்கையை மறைக்கிறது’ இவ்வாறு மம்தா கூறினார்.
மகா கும்பமேளா: பேருந்து விபத்துக்குள்ளானதில்
4 பேர் பலி: 10 பேர் காயம்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள 21 பக்தர்களை ஏற்றிச் சென்ற சிற்றூந்து (சிறிய பேருந்து) பதேபூர் மாவட்டம் அருகே டிராக்டர் டிரெய்லர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்த னர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். தகவல றிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துக்குவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சிற்றூந்து ஓட்டுநர் விவேக் சிங் (27), யாத்ரீகர்கள் பிரேம் காந்த் ஜா (55), திகம்பர் ஜா (52), விமல் சந்திர ஜான் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் புதுடில்லியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *