சென்னை – இராணி மேரிக் கல்லூரியும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யமும் இணைந்து ‘திராவிடக் கருத்தியலும், இந்திய அரசமைப்புச் சட்டமும்’ என்ற தலைப்பில் நடத்திய தேசியக் கருத்தரங்கினைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசும் வழங்கி கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் உமா மகேஸ்வரி பாராட்டினார். நிகழ்ச்சியில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் பேராசிரியர் ெப.ஜெகதீசன், துணைத் தலைவர் பேராசிரியர் அ. கருணானந்தன், பேராசிரியர் ராமு. மணிவண்ணன், பேராசிரியர் திலகவதி, வழக்குரைஞர் அ.அருள்மொழி, துறைத்தலைவர் (பொறுப்பு) முனைவர் கமலா தேவி மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர். (சென்னை, 12.2.2025)