குஜராத் மாடல் பானம் குடித்த 3 பேர் பலி

viduthalai
2 Min Read

நாடியாட்,பிப்.12- குஜராத்தின் கேடா மாவட்டத்தின் நாடியாட் பகுதியில், சோடா குடித்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குஜராத்தில் மது விலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.

கள்ளச் சாராயம்

இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: நாடியாட் பகுதியை சேர்ந்த சிலர் கள்ளச்சாராயத்தை சோடாபாட்டிலில் அடைத்துவைத்து விற்றுள்ளனர். இதை கனு சவுகான், 59, என்பவர் வாங்கி வந்துள்ளார். அவரும், ரவிந்திரா ரத்தோட், 50, யோகேஷ் குஷ்வா, 40, ஆகியோரும் அதை குடித்த சில நிமிடங்களில் உயிர் இழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் ரத்த மாதிரி, உள்ளுறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அறிக்கை கிடைத்த பின்பே, மூவரின் மரணத்துக்கான காரணம் தெரியும். அவர்களுடன் இருந்த ஒரு குழந்தை, அந்த சாராயத்தை அருந்த மறுத்ததால் உயிர் தப்பியுள்ளது. கனு சவுகானுக்கு சோடா பாட்டிலில் விஷச்சாராயத்தைக் கொடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

ATM கார்டில் உள்ள
இந்த 16 எண்கள் அர்த்தம் தெரியுமா?

முதல் எண், இண்டஸ்ட்ரியை குறிக்கிறது. அதாவது, பேங்கிங், பெட்ரோலியம், ஏர்லைன், இவற்றில் எது என சொல்வது.
அடுத்த 5 எண்கள், கம்பெனியை குறிக்கிறது.  விசா கார்டு, மாஸ்டர் கார்டு போன்ற கம்பெனியை விளக்குகிறது.
7-15 வரையிலான நம்பர்கள், பேங்க் அக்கவுண்ட்டுடன் தொடர்புடையது. ஆனால், அக்கவுண்ட் நம்பரும் இதுவும் ஒன்றாக இருக்காது. கடைசி நம்பர் Luhn algorithm முறையில் கம்ப்யூட்டரில் உருவாவது.

இறப்பிலும் இணைபிரியாத 67 ஆண்டு காதல்

கணவன்-மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை இறந்த பின்பும் இந்த இணையர் நிரூபித்து இருக்கிறார்கள். மதுரையில் வீராயி (80) இரு நாள்களுக்கு முன் தூக்கத்திலேயே உயிரிழந்தார். ஆசை மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் துக்கத்தில் இருந்த கணவர் முத்து (85), மனைவியை போலவே அதற்கு அடுத்த நாள் இரவு தூக்கத்திலேயே இறந்துள்ளார். 67 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்த இணையர் இறப்பிலும் இணைபிரியாது அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *