சொந்த நிலத்தையே பாதுகாக்க முடியாத பாதுகாப்புத் துறை

1 Min Read

புதுடில்லி, பிப்.11 நாடு முழுவதும் பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான 10,249 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் நடை பெற்று வருகிறது. இந்நிலை யில், மாநிலங்களவையில் இது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘நாடு முழுவதும் பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமாக 18 லட்சம் ஏக்கா் பரப்பளவிலான நிலங்கள் உள்ளன. இதில் 10,249 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உளளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்த மாநிலங்கள் வாரியான தக வலும் ஒன்றிய அரசின் பதிலில் இணைக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் 153 ஏக்கா் பரப்பளவு நிலங்க ளும் அதிகபட்சமாக உத்தரப்பிர தேசத்தில் 1,759 ஏக்கா் பரப்புளவு நிலங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன.

மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில்,
‘பாதுகாப்பு அமைச்சகத்தின் சொத்துகள் பொதுவாக 90 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்படு கிறது. குத்தகைக் காலம் நீட்டிப்பு உள்பட இந்த நடைமுறை தொடா்பான ஒழுங்குமுறைக்கு கடந்த 2017-இல் அமைச்சகம் வெளியிட்ட இடைக்கால கொள்கை அமலில் உள்ளது. இக்கொள்கை வரும் டிசம்பா் 31 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *