விருதுநகர், பிப். 10- விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டம் நேற்று (9.2.2025) மாலை 6 மணியளவில், அருப்புக் கோட்டை பெரியார் மாளிகையில், மாவட்ட இளைஞரணித் தலைவர் இரா.அழகர் தலைமையில், மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், அமைப்பாளர் வெ.முரளி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நகரச் செயலாளர் பா.இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக பொன்முடி கூட்ட நோக்கம் மற்றும் இளைஞ ரணி அமைப்புப் பணிகள், செயல் திட் டங்களை விளக்கி சிறப்புரையாற்றினார். நகர அமைப்பாளர் க.சுப்பிரமணி, மாணவர் கழக அமைப்பாளர் அ.பெரியார்செல்வம், மு.முனியசாமி, பொ.கணே சன், மு.முத்துக்குமார், மு.புகழேந்தி, அ.யாழ் திலீபன் மற்றும் தோழர்கள் கருத்துரை வழங்கினர்.
மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் அமைப்புப் பணிகள், பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதெனவும், இயக்க இதழ்கள் சந்தா சேர்ப்பதெனவும், இராச பாளையம் மாவட்டம் முறம்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பெருமளவில் பங்கேற்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
நிறைவாக நகர இளைஞ ரணித் தலைவர் க.திருவள் ளுவர் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.