சாவு! சாவு! இதுதான் கும்பமேளாவா? கார் லாரி மோதலில் நான்கு பக்தர்கள் சாவு

1 Min Read

பிரயாக்ராஜ், பிப்.10 உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவிற்குச் சென்ற சத்தீஸ்கர் மாநில பக்தர்கள் 4 பேர் காலை விபத்தில் பரிதாபமாக இறந்தனர்.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த 13-ந் தேதி தொடங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் நாள் தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

அதே போல் கும்பமேளாவிற்கு சென்று புனித நீராடிவிட்டு வீடு திரும்பிய பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் நேற்று காலை 6.30 மணியளவில் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் தர்நாகர் கிராமத்திற்கு அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது . இந்த விபத்தில் வாகனத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருப்பினும் அதில் சிகிச்சை பலனின்றி லட்சுமி பாய் (30), அனில் பிரதான் (37), தாக்கூர் ராம் யாதவ் (58), மற்றும் ருக்மிணி யாதவ் (56) ஆகியோர் உயிரிழந்தனர். பின்னர் உடலானது உடற்கூராய்வு அனுப்பப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *