சென்னை, பிப்.9- பெருங்கவிக்கோ வா. மு.சேதுராமனின் 90-வது பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திட லில் கொண்டாடப்பட் டது. அமைச்சர்கள் பங் கேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் வா.மு.சேது ராமன் 90-ஆவது பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திடலில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு வி.அய்.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன் னிலை வகித்தார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் பெருங்கவிக்கோ வா.மு.சேது ராமனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். காலை முதல் மாலை வரை கவியரங்கம், பட்டிமன்றம் என தொடர்நிகழ்ச்சிகள் நடந் தது, விழா மலர், செம்மொழி வென்ற போர்க்களம், எவர்கி ரீன் கவிதைகள் ஆகிய புத்தகங் கள் வெளியிடப்பட்டது.
பொற்கிழி
மாலையில் நடந்த நிகழ்ச்சி யில் வா.மு.சேதுராமனுக்கு தமிழ்ச் சங்கங்களால் தொகுத்து அளிக்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கான பொற்கிழியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வழங்கினார். தொழிலதிபர் வி.ஜி. சந்தோசம், கணக்கில் குழும தலைவர் (அமெரிக்கா) ராம மோகன் நடராஜன், அமெரிக்கா தமிழ்ப்பணி கழக தலைவர் வா.மு.சே.கவிஅரசன், மலேசியா தமிழ் சங்கம் மாணிக்கம், புதுச்சேரி தமிழ் சங்க தலைவர் முத்தையா உள்படதமிழறிஞர்கள், எழுத் தாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஏற்புரை வழங்கி வா.மு. சேதுராமன் பேசியதாவது:-
தமிழுக்காக சேவை செய்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கிறார்கள். சம காலங்களில் வாழும் எழுத்தாளர்கள், கவி ஞர்கள் கவுரவிக்கப்பட எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதையை தருவதில்லை.
மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞர் தமிழ் அறிஞர்களை கவுரவித்தார். அவரது வழியில் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். நம்முடைய முதலமைச்சரை ஒன்றிய அரசு இழிவுபடுத்தினால் தமிழ் இனம் வெகுண்டு எழும். இந்த மண்ணை, மொழியை நாம் காப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தமிழ்ப் பணி கழகம் உலக தமிழ் அறக்கட்டளை செய்திருந்தது.