சேலம் – பெரியார் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இருக்கை, அறிஞர் அண்ணா இருக்கை, முத்தமிழறிஞர் தமிழவேள் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு மய்யம் சார்பில்
2025 மார்ச் நான்காவது வாரம் நடத்தப்பெறவிருக்கும் ‘திராவிட இலக்கியம் – இதழியல்’ என்னும் பொருண்மை யிலான இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கிற்கு ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை மாணவர்களிடமிருந்து கீழ்க்காணும் பொருண்மைகளுள் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
ஆய்வு பொருண்மைகள்
இலக்கியங்களில் திராவிடவியல் சிந்தனைகள்
திராவிடவியல் வளர்ச்சிக்கு இலக்கியங்களில் பங்களிப்புகள்
திராவிட இலக்கியங்களில் அழகியல்
திராவிட இலக்கிய ஆளுமைகள்
திராவிட இலக்கிய மொழிநடை
திராவிட மானுடவியல்
திராவிடவியல் ஆய்வுகள்
திராவிட இலக்கியக்கலை
திராவிட திரைக்கலை
திராவிட பேச்சுக்கலை
திராவிட நாடகக் கலை
திராவிட இயக்க ஆளுமைகள்
திராவிட இதழியல்
திராவிட இயக்க இதழ்கள்
திராவிட இயக்க இதழாசிரியர்கள்
மொழி வளர்ச்சியில் திராவிட இதழ்களின் பங்களிப்புகள்
திராவிட இயக்க இதழ்களின் விளைபயன்கள்
திராவிட இயக்க இதழ்கள் எதிர்கொண்ட சவால்கள்
திராவிட இயக்க இதழ்களின் சமூகப் பங்களிப்புகள்
திராவிட இயக்க இதழ்களின் வடிவமைப்பு
மேலும் ‘திராவிட இலக்கியம் – இதழியல்’ தொடர்பான பிற தலைப்புகளும் கட்டுரைகள் அமையலாம்.
ஆய்வுக் கட்டுரைகளுக்கான வழிகாட்டுதல்கள்
1. ஆய்வுச் சுருக்கம் வழங்க இறுதி நாள்: 10.2.2025
2. கட்டுரைகள் வழங்க இறுதி நாள்: 28.2.2025
3. கட்டுரைகள் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துருவில் 12 புள்ளி அளவில் 1.5 இடைவெளியுடன் அமைதல் வேண்டும். கட்டுரைகள் 10 பக்கங்களுக்கு மிகாமல் அமைய வேண்டும்.
4. ஆய்வுச் சுருக்கம் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
கருத்தரங்கப் பதிவு கட்டணம்
ஆய்வறிஞக்ள் மற்றும் பேராசிரியர்கள் – ரூ.1500
ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் – ரூ.1000
முதுநிலை மாணவர்கள் – ரூ.500
தொடர்பிற்கு
முனைவர் இரா.சுப்பிரமணி, முனைவர் ரா.சிலம்பரசன்