கொடைக்கானல் பிளாஸ்டிக் கொண்டு வந்தால் வாகனத்தின் உரிமை பறிபோகும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

2 Min Read

கொடைக்கானல், பிப்.9 கொடைக்கானலுக்கு நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள் கொண்டு வரும் தனியார் வாகனங் களின் உரிமம் ரத்து செய் யப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் எச்சரித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணி களுக்கு முறையான அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டு இருந்தது. இதைத் ெதாடர்ந்து நேற்று (8.2.2025) கொடைக்கானலில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆய்வு செய்தார்.

வட்டக்கானலில் புதிய சுகாதார வளாக பணி, அருவி பகுதியில் சுற்றுலா வாகன நிறுத்துமிட பணியை ஆய்வு செய்து விரைவாக முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அப்சர்வேட் டரி ரோஜா பூங்கா பகுதி பிரதான சாலை ஓரத்தில் ஒரு ஏக்கர் அரசு நிலத்தில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண் டார். தொடர்ந்து, பேருந்து நிலையத்தில் நிறுத்தியிருந்த மற்ற வாக னங்களை வெளியே எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பர்மிட்டை ரத்து

மேலும் இனி வாக னங்கள் நிறுத்தப்பட்டால் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும், தொடர்ந்து வாகனங்களை நிறுத்தினால் பர்மிட்டை ரத்து செய்யவும் உத்தர விட்டார். பின்னர் மாவட் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ெகாடைக் கானலில் வரும் கோடை சீசனில் சுற்று லாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும். முக்கிய பிரச்சினையாக வாகன நிறுத்தும் இடங்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. இதற்காக புதிதாக 4 இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.

தனியார் வாகனங்களுக்கு

இதில் சுமார் 1,000 வாகனங்கள் இந்த பகுதிகளில் நிறுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன. 2 மாதங் களில் இப்பணிகள் முடிவு பெறும். கொடைக் கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக கொண்டு வரும் தனியார் வாகனங்களுக்கு எச்ச ரிக்கை செய்து அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் அந்த வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுலா இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஆர்ஓ பிளான்ட்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *