பெங்களூரு, பிப்.8 கருநாடக மேனாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கருநாடக உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
பாலியல் புகார்
பெங்களூரு, சதாசிவநகா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் பெங்களூரு, டாலா்ஸ் காலனி இல்லத்தில் 2024 ஆம் ஆண்டு பிப்.2ஆம் தேதி மேனாள் முதலமைச்சர் எடியூ ரப்பாவைச் சந்தித்த போது, தனது 17 வயது மகளை பாலியல் துன்பு றுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதனடிப்படையில், பாஜக மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா வுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டப்பிரிவு 8, இந்திய தண்டனை சட்டப்பிரிவு சட்டப் பிரிவுகள் 354ஏ, 204, 214- இன்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிஅய்டி) மாற்றி மாநில காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.
ஜூன் 12-ஆம் தேதி விசார ணைக்கு ஆஜராகாததால், எடி யூரப்பாவைக் கைது செய்ய கைது ஆணை பிறப்பிக்குமாறு பெங்களூரில் உள்ள முதலாம் விரைவு நீதிமன் றத்தை சிஅய்டி ஜூன் 13-ஆம் தேதி அணுகியிருந்தது. அதன்பேரில், எடியூரப்பாவைக் கைது செய்ய ஜாமீனில் வெளியே வரமுடியாத ஆணை பிறப்பித்து ஜூன் 13-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முன் ஜாமின்
இதனிடையே, தன் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள போக்கோ வழக்கை ரத்து செய்யக் கோரி கருநாடக உயா்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், கருநாடக உயா்நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா முன் நேற்று எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, எடியூரப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கினார். எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டிருந்தது.