சிறுபான்மையினரையும் பழங்குடியினரையும் அச்சுறுத்தும் பொது சிவில் சட்டம் – சட்ட ஆணையத்துக்கு தொல்.திருமாவளவன் கடிதம்

2 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 15 –  பொது சிவில் சட்டம் பன்மைத்துவத்துக் கும், பழங்குடி சமூகங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு, இந்திய சட்ட ஆணை யத் தலைவருக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக கடிதத்தில் தொல்.திருமாவளவன் கூறியிருப்பதாவது:

2018இ-ல் வெளியிடப்பட்ட சட்ட ஆணையத்தின் அறிக்கை யில், பொது சிவில் சட்டத்துக்கு அவசியமில்லை என்று கூறப்பட் டது. ஆனால், தற்போது மீண்டும் பொது சிவில் சட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.  இந்த சட் டம் பன்மைத்துவத்துக்கும், பழங் குடி சமூகங்களுக்கும் அச்சுறுத் தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இந்த சட்டத்தைச் செயல்படுத் துவதற்கான முயற்சியில், அடிப் படை உரிமைகளையும், அரச மைப்பு உறுதிசெய்துள்ள மதச் சார்பின்மை கொள்கைகளையும் அரசு மீறுகிறது.

இந்த சட்ட வரம்பிலிருந்து கிறிஸ்தவர்கள் மற்றும் சில பழங் குடியினப் பிரிவினருக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப் படுவதாக செய்தி வெளியாகியுள் ளது. இது உண்மையாக இருந்தால், பொது சிவில் சட்டத்தின் நோக்கம் குறித்தே கேள்வி எழுகிறது. தனி நபர் சட்டங்களின் கீழ் பாகுபாடு களை சரி செய்வது மிக முக்கியம். 

பெரும்பான்மை மதமான இந்து மதத்தில் நிலவும் பாரபட்ச மான நடைமுறைகளை ஒழிக்க, தக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். 

இந்து கோயில்களில் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழ் நாடு அரசு இயற்றிய சட்டம், நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண் டிய முக்கியமான எடுத்துக்காட்டு. பொது சிவில் சட்டத்தை அறிமுகப் படுத்துவதைவிட, இதுபோன்ற நடவடிக்கைகளே முக்கிய மானவை.

சட்டமேதை அம்பேத்கர் மீது அரசுக்கு மரியாதை இருந்தால், இந்து மதத்தின் அனைத்து ஜாதி யினருக்குமான பொது சிவில் சட் டத்தைக் கொண்டுவர வேண்டும். 

பொது சிவில் சட்டம் தொடர் பான இந்தக் கவலைகள் மற்றும் ஆட்சேபத்தை, இந்திய சட்ட ஆணையம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். 

நமது சமூகத்தின் பன் முகத் தன்மையை மதிக்கும் முற்போக் கான சீர்திருத்தங்களை ஊக் குவிக்கும் அதேநேரத்தில், தனி நபர் சட்டங்களைப் பாதுகாப்பது சமூக நல்லிணக்கத்தைப் பேணுவ தற்கும், சமூகநீதிக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் அவசியாகும். 

இவ்வாறு கடிதத்தில் திருமாவளவன் வலியுறுத்தி யுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *