கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.2.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*தகுதியுடையோர் 9.4 கோடி; 9.7 கோடி பேர் மகாராட்டிரா தேர்தலில் வாக்களித்தது எப்படி? ராகுல் சரமாரி கேள்வி. தேர்தல் ஆணையம் பதிலளிக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவேன் மகாராட்டிரா தேர்தலில் மெகா மோசடி: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் 3 ஆண்டாக நிறுத்தி வைத்தது ஏன்? மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் ஆண்டுக்கணக்கில் நிறுத்தி வைக்க அரசமைப்பு சட்டத்தில் வழிவகை உள்ளதா? – உச்ச நீதிமன்றம் கேள்வி மசோதாக்களை ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக ஏன் நிறுத்தி வைத்தார் என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்க வேண்டும் என உத்தரவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உ.பி. கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தோருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு. குமுறுகிறார்கள் மக்கள்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘கைது செய்வதற்கான காரணங்களைத் தெரி விப்பது சம்பிரதாயம் அல்ல, ஆனால் கட்டாய அரசிய லமைப்புத் தேவை’ உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.

டெலிகிராப்:

* மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தியின் குற்றச் சாட்டுகளுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு. பாஜக வினரே அவர்களது வெற்றியை நம்பவில்லை என கருத்து.

* உ.பி.யில் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் மாநில தேர்தலில் பாஜகவை அதிகாரத்திலிருந்து அகற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் தலித்துகளும் ஒன்று படுவார்கள்: அகிலேஷ் நம்பிக்கை

டைம்ஸ் ஆப் இந்தியா:

* அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்கு குஜராத், பஞ்சாப் ஏஜெண்டுகள் ஒரு தனிநபருக்கு ரூ. 45-60 லட்சமும், ஒரு குடும்ப அலகுக்கு ரூ. 1-1.25 கோடியும் கட்டணம் வசூலிப்பு.

* டெல்லியில் பொது நிலத்தில் உள்ள அங்கீகரிக்கப் படாத 249 மதக் கட்டமைப்புகளையும் அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறிக்கை அளித்திட அதற்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு டில்லி உயர்நீதிமன்றம் கட்டளை.

* ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் நடைபெறும் ஊழல் குறித்து தனது குற்றச்சாட்டு தொடர்பாக தனது தொலைபேசி ஒட்டுக்கேட்பு நடத்தியதாக அரசு மீது ராஜஸ்தான் அமைச்சர் கிரோரி லால் மீனா குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *