மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி
புதுடில்லி, பிப்.8 அய்ந்து மாதங்களில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடமிருந்து எந்தப் பதிலும் இல்லையே, ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
2024 நவம்பர் மாதம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக தலைமை யிலான மகாயுதி கூட்டணி (சிவ சேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) 230-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர் பார்க்கப்பட்ட மகா விகாஸ் அகாதி கூட்டணி (காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்)) வெறும் 46 தொகுதிகளை மட்டுமே வென்றது. தேர்தல் ஆணையம் மற்றும் அரசு அதிகாரிகள் மூலம் முறைகேடுகளை மேற்கொண்டு மகாராட்டிராவில் மகாயுதி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது என பல் வேறு குற்றச்சாட்டுகள் கிளம்பின. மேலும் வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் இவிஎம் வாக்குப்பதிவு இயந் திரத்தில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் பதிவு என பல்வேறு ஆதாரங்கள் வெளியாகின.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிவசேனா (உத்தவ்) எம்.பி., சஞ்சய் ராவத் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்.பி., சுப்ரியா சுலே ஆகியோர் கூட்டாக நேற்று (7.2.2025) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறுகை யில்,‘‘மகாராட்டிரா சட்டமன்ற தேர் தல் தொடர்பாக வாக்காளர்கள் மற்றும் வாக்குப் பட்டியல் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குழுக்கள் ஆய்வு நடத்தியுள்ளன. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பல முரண்பாடுகளை கண்ட றிந்துள்ளோம்.
39 லட்சம் வாக்காளர்கள் யார்?
2019 சட்டப்பேரவைத் தேர்தலுக் கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மகா ராட்டிராவில் புதிதாக 32 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் 2024 மக்களவைத் தேர்த லுக்கும் 2024 மகாராட்டிர சட்ட மன்ற தேர்தலுக்கும் இடைப்பட்ட வெறும் 5 மாதங்களில் மட்டும் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்ட 39 லட்சம் வாக்காளர்கள் யார்? திடீ ரென வாக்காளர்கள் உருவானது எப்படி? இந்த எண்ணிக்கையானது இமாச்சலப் பிரதேசத்தின் மொத்த வாக் காளர்களின் எண்ணிக்கைக்கு சமம் ஆகும். குறிப்பாக மகாராஷ்டிராவில் வாக்கு செலுத்தும் வயதுடைய மொத்த மக்கள் தொகையை விட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.
எங்களுக்கு மக்களவை மற்றும் சட்டமன்ற வாக்காளர் பட்டியல் தேவை. அதே போல அவர்களின் பெயரும் முகவரியும் தேவை. புதிய வாக்காளர்கள் யார் என்பதை
தெரிந்துகொள்ள விரும்புகிறோம்
தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள்…
பல வாக்காளர்கள் நீக்கப்பட்டுள் ளனர், ஒரு வாக்குச்சாவடியில் இருந்து மற்றொரு வாக்குச்சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகத்தினரே அதிகம்.
தேர்தல் ஆணையத்திடம் கேட் கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. பதில ளிக்காததற்கு ஒரே காரணம், அவர்களின் செயலில் தவறு இருப்பது தான். குற்றச் சாட்டுகளை முன்வைக்கவில்லை. தரவுகளை தெளிவாக வழங்குகிறோம்” என அவர் கூறினார்.