மியான்மரில் ஜனநாயகத்திற்கு சிறையா? ஆங்சான் சூகியின் வீட்டை ஏலம் விடும் முயற்சி தோல்வி

2 Min Read

மியான்மா, பிப். 7- மியான்மரில் ராணுவ ஆட் சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருந்தார். இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு 2015ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அந்த நாட்டின் தலைவ ராக பதவியேற்றார்.
அதன்பின் 2020ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்லில் 81 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார். 2021ஆம் ஆண்டு நாடு மீண்டும் ராணுவம் ஆட்சிக்குள் கொண்டு வரப் பட்டது. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக் குப்பதிவு செய்யப்பட்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.

ராணுவப் புரட்சி

சிறையில் உள்ள ஆங் சான் சூகியை விடுதலை செய்யக்கோரி அங்கு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது அந்த நாட்டின் ராணுவம் கோர முகத்தை காட்டி அடக்கி வருகிறது. மியான்மரில் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வரும்நிலையில் ஆங் சான் சூகிக்கு சொந்தமான சொத்துகளை ராணுவம் விற்று பொருளாதார இழப்பை சரிகட்டி வருகிறது.

வீட்டை ஏலமிட முயற்சி

ராணுவ நெருக்கடி நிலையின்போது ஆங் சான் சூகி அடைக்கப் பட்டிருந்த வீடு கையகப் படுத்தப்பட்டது. மேலும் அதனை ஏலம் விட ராணுவம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஏலம் விடப்பட்ட அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை.

வரலாற்று சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னமாக கருதப்படும் அந்த குட்டி பங்களா, யங்கூனில் உள்ள இனியே ஏரிக்கரையில் கட்டப்பட்டது. சூகியின் தந்தையும், அந்த நாட்டின் விடுதலை போராட்ட வீரரான ராணுவ தளபதி ஆங் சாங்கும் வசித்து வந்த பூர்வீக வீடாக அது உள்ளது. அந்த வீடுதான் ஆங் சான் சூகி 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு அறவழியில் போராட வழிவகுத்தது. மேலும் நோபல் பரிசையும் பெற்றுத் தந்தது.

அமெரிக்கா மேனாள் அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், அய்.நா சபை மேனாள் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் முதலியவர்கள் அந்த வீட்டில் வைத்து தான் ஆங் சான் சூகியை சந்தித்தது குறிப் பிடத்தக்கது. ஏலம் விடும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், மியான்மரில் ஆளும் ராணுவ அரசுக்கு ஏமாற் றமே மிஞ்சியுள்ளது. ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட மூன்றாவது முறையாக ராணுவ அரசு முயற்சித்தது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *