ஒரத்தநாடு, பிப்.6 ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழ கத்தின் சார்பில், ‘‘தந்தை பெரியார் பிறவாதிருந்தால்’’ என்ற தலைப்பில் ஒரத்தநாடு பேருந்து நிலையம் பெரியார் படிப்பகம் அருகில், நேற்று (5.2.2025) மாலை 6 மணியளவில் பரப்புரை கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டு கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் இந்த நாட்டில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும் ஆர்.எஸ்.எஸ்.கைக்கூலிக்கு பதிலடியாக ஆதாரப்பூர்வமான செய்திகளை தனது உரையில் எடுத்துரைத்தார்.
ஒரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் பொறியாளர் ச.பிரபா கரன் நிகழ்விற்கு தலைமை யேற்று உரையாற்றினார். ஒரத்த நாடு நகரச் செயலாளர் பு.செந்தில் குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், ஒரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, வீதி நாடக கலைக்குழு மாநில அமைப்பாளர் பி.பெரியார்நேசன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் ஆகியோர் தொடக்கவுரையாற்றினர்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கருத்துரையாற்றினார்.
தொடக்கத்தில் அ.பெரியார் செல்வன் கழகப்பாடல்களை பாடினார்.
மாவட்ட துணைச் செயலாளர் ரெ.சுப்பிரமணியன், ஒன்றிய இளை ஞரணி தலைவர் நா.அன்பரசு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு.குமரவேல், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் இரா.ராஜதுரை, வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் கோ.இராமமூர்த்தி,சடையார் கோவில் குழந்தைவேல், தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா.வீரக்குமார், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், கண்ணை கிழக்கு கிளைக் கழகத் தலைவர்
இரா.செந்தில்குமார்,தெலுங்கன் குடிக்காடு மு.ஊ.ம.தலைவர் பூபதி, திமுக வழக்குரைஞர் அணி பொருளாளர் தவ.ஆறுமுகம் ஒக்கநாடு கீழையூர் துரை உள்ளிட்ட கழக தோழர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.