நாகர்கோவில் மாநகர் பகுதியில் தெருமுனை விழிப்புணர்வு பரப்புரை

1 Min Read

கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சி நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத்தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கிவைத்தார். பொதுமக்களுக்கு தந்தை பெரியாருடைய கருத்துகள் அடங்கிய நூல்கள், துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன கழக பொதுக்குழு உறுப்பினர் மா. மணி, மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், கழக காப்பாளர் ம.தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக, மகளிரணி தலைவர் சு.இந்திராமணி, மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், மாநகர கழக செயலாளராக மு.இராஜசேகர், மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ் கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், கழகத் தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை மற்றும் கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *