அமெரிக்கா – சீனா பொருளாதாரப் போர் அமெரிக்க பொருள்களுக்கு 15 விழுக்காடு கூடுதல் வரி டிரம்பின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி

viduthalai
1 Min Read

பீகிங், பிப்.5 அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்பின் பொருளாதார கொள்கைகள், வெளிநாடுகள் மீதான வரி விதிப்பு ஆகி யவை பன்னாட்டு வர்த்த கப் போரை தூண்டும் வகையில் அமைந்துள்ளன. அமெரிக் காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடுகளான கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீத வரியும் விதித்தார்.

வரி விதிப்பு

அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவால் உலக அளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி யடைந்துள்ளன. வரி விதிப்பை எதிர்கொண்ட நாடுகள், டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றத் தொடங்கின.
கடைசி நேரத்தில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக, மெக் சிகோ மற்றும் கனடா மீதான வரி விதிப்பை மட்டும் ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார் டிரம்ப். அதாவது, புலம் பெயர்ந்தோர் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்க இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து, அமெரிக்கா சற்று பின்வாங்கியிருக்கிறது.

சீனா பதிலடி

ஆனால், சீனா மீதான வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. தற்போதுள்ள வரிகளுக்கு மேல் கூடுதலாக 10 சதவீத வரியை சீனா எதிர்கொள்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வர்த்தக கட்டுப்பாட்டு நடவடிக்கையை சீனா தொடங்கிவிட்டது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவ இயற்கை எரிவாயுவுக்கு 15 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளது. எண்ணெய் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு 10 சதவீத வரியை விதித்துள்ளது.
சீனாவின் சந்தை ஒழுங்கு முறை நிர்வாகம் வெளியிட் டுள்ள அறிக்கையில், விதி முறைகளை மீறிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம் மீது விசா ரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கி டையே மீண்டும் ஒரு வர்த்தக போர் ஏற்படலாம் என கருதப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *