கோட்சேவை ஓடிப்பிடித்த இவர் பெயர் ரகுநாத் நாயக்

Viduthalai
1 Min Read

இவர், டில்லி பிர்லா ஹவுசில் தோட்ட பராமரிப்பாளராக பணி புரிந்தவர்.
நாதுராம் கோட்சே, மூன்று முறை காந்தியாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பி ஓட முயற்சிக்கும் போது… எல்லோரும் ஒரு கணம் அதிர்ச்சியில் இருக்கையில், இவர்தான் துணிச்சலோடு, அவனை தாவிப் பிடித்து தான் வைத்திருந்த மண் வெட்டும் கருவியுடன், கோட்சேவுடன் சண்டையிட்டு கீழே தள்ளி விட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் வரை, அவனை எழுந்திருக்க விடாமல் பற்றிக் கொண்டார்.

இவர் மட்டும் அப்படி அன்று, செய்திருக்கா விட்டால், கோட்சேவும் தப்பியிருந்தால், இன்று கோட்சேவும், சாவர்க்கரும், குற்றவாளிகள் தான் என்று, நமக்கு தெரியாமலே போயிருக்கும்.
ஒரிசாவில் பிறந்த இவரின் வீட்டில், இன்றளவும் அவரது மார்பளவு சிலை வைக்கப் பட்டிருக்கிறது. அவரது ஊர், காந்தியாரைச் சுட்டவனை பிடித்த ஊர் என்றுதான் அறியப்படுகிறது. நமது நாட்டின் துரோகிகளை அடையாளம் காட்டிய இவரை, நன்றியுடன் போற்றுவோம்.
தகவல்: கோ.கருணாநிதி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *