மகாராட்டிர அரசு அலுவலகங்களில் மராட்டியத்தில்தான் பேச வேண்டும்
மாநில அரசு உத்தரவு
மும்பை, பிப்.05 மகாராட்டிர அரசு அலுவ லகங்களின் கோப்புகளில் பயன்பாட்டு மொழியாக மராத்தியை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு உத்தரவிட்டது.
இதுதொடா்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது: ‘மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் அலுவலகங்கள் ஆகியவற்றில் கோப்புகளில் மராத்தி மொழியை பயன்படுத்த வேண்டியது கட்டாயம்.
மராத்தி மொழி
கணினி தட்டச்சுகளிலும் மராத்தி தேவநாகரி எழுத்துகளும், ஆங்கில எழுத்துகளும் இடம் பெற வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு வருகை தருபவா்களும் மராத்தியிலேயே உரை யாட வேண்டும். வெளிநாட்டினருக்கும் வெளி மாநிலத்தவா்களுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அறிவிப்பு பலகைகள் அனைத்தும் மராத்தி மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம். இதன் மூலம் மாநில நிர்வாகத்திலும், பொது வாழ்விலும் மராத்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.