கும்பமேளா முஸ்லிம்களின் தயாள உள்ளம்

2 Min Read

பிரக்யாராஜ், பிப்.4- உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்நகரில் வசிக்கும் முஸ்லிம்கள், மகா கும்பமேளாவுக்கு வருபவர்களை தங்கள் பகுதியிலும் குடியிருப்பு களிலும் தங்கவைத்து உதவுகின்றனர்.
இத்துடன், அவர் களுக்கு உணவு மற்றும் போர்வைகளையும் வழங்கு கின்றனர். இந்நிகழ்வுகள், பிரயாக்ராஜில் முஸ்லிம் கள் அதிகம் வாழும் நகாஸ் கொஹன்னா, சவுக், ரோஷன்பாக், சேவை மண்டி, ராணி மண்டி மற்றும் ஹிம்மத்கன்ஞ் ஆகிய பகுதிகளில் தொடர்கின்றன.

உதவி

கடந்த ஜனவரி 27 நள்ளிரவு, மகா கும்ப மேளாவில் நெரிசல் ஏற்பட்டது. இதற்கு அடுத்த நாள் கும்பமேளாவுக்கு வந்தவர்கள் காவல் நிலையங்களில் தஞ்சம் கேட்டு குவியத் தொடங் கினர்.

இதைப் பார்த்த அந்நகர முஸ்லிம்கள் தங்கள் பங்குக்கு ஏதாவது உதவி செய்ய முடிவு செய்தனர். இதில், முஸ்லிம்களின் நிர்வாகப் பள்ளியான யாத்கார் ஹுசைனி இண்டர் காலேஜின் வளாகம் திறந்து விடப்பட்டது.

இங்கு கும்பமேளாவுக்கு வந்தவர்கள் தங்க அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு குளிருக்கான கம்பளிகளும், போர்வை களும் வழங்கப்பட்டன. மூன்று வேளை உணவும் முஸ்லிம்கள் சார்பில் விநியோகிக்கப்பட்டது.

இதேபோல், முஸ்லிம்களின் மார்கெட் கட்டடங்களின் வளாகத்திலும் கும்ப மேளாவினருக்கு தங்கும் வசதி செய்யப்பட்டது.
இவர்களில் சிலரை முஸ்லிம்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

இதுபோல், கும்பமேளாவினர் அதிகபட்சமாக இரண்டு தினங்கள் தங்கிய பின், தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
இவர்கள் தங்கிய சமயங்களில் அனை வருக்கும் தேநீர், பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில்களையும் அப்பகுதி முஸ்லிம்கள் வாங்கி வந்து விநியோகித் தனர்.

உணவு

இதுகுறித்து பிரயாக்ராஜின் மும்தாஜ் மஹாலில் வசிக்கும் மன்சூர் உஸ்மானி கூறும்போது,
‘‘அனைவருக்கும் காய்கறி உணவுகள் மட்டுமே பறிமாறப் பட்டன. இதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் கும்பமேளா சமயங்களில் தவறாமல் நடைபெறுகிறது.

இதை பிரயாக்ராஜின் முஸ்லிம்கள் தங்கள் வாழ்வின் ஒரு அங்க மாகவே கருதி செய்து வருகின்றனர்’’ என்றார்.
ஒவ்வொரு கும்பமேளா விலும் நடத்தப்படும் உணவு விடுதிகள் உள் ளிட்ட கடைகளை முஸ்லிம்களும் நடத்தி வந்தனர்.
இந்த ஆண்டும் மகா கும்பமேளாவில் இந்து அல்லாதவர்கள் வியா பாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என துறவிகளின் அகாடாக்கள் வலியுறுத்தி இருந்தன.

ஸநாதனத்தை மதிப்பவர்களுக்கு மட்டுமே மகா கும்பமேளாவில் அனுமதி என்றும் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *