நியாயமான தேர்தல் நடத்தப்படுவதை கண்காணிக்க குழு அமைத்தது காங்கிரஸ்

1 Min Read

புதுடில்லி, பிப்.3 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை கண்காணிக்க, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், தலைவர்கள் மற்றும் நிபுணர்களின் அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை (EAGLE) அமைத்துள்ளார்.

இதில் பின்வரும் உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழு முதலில் மராட்டிய வாக்காளர் பட்டியல் மோசடி பிரச்சினையை எடுத்துக்கொண்டு, விரைவில் தலைமைக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும். EAGLE மற்ற மாநிலங்களில் கடந்த கால தேர்தல்களையும் பகுப்பாய்வு செய்யும், மேலும் வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவது தொடர்பான அனைத்து பிற பிரச்சினைகளையும் முன்கூட்டியே கண்காணிக்கும்.

1. அஜய் மக்கன்2. திக்விஜய சிங்3. டாக்டர். அபிஷேக் சிங்வி4. பிரவீன் சக்ரவர்த்தி5. பவன் கேரா6. குர்தீப் சிங் சப்பல்7. டாக்டர்.நிதின் ரவுத்
8. சல்லா வம்ஷி சந்த் ரெட்டி.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *