கடவுளை நம்பினோர் கைவிடப்படுவர் ஆன்மீகப் பயணம் சென்ற 5 பக்தர்கள் பலி

1 Min Read

பாட்னா, பிப்.3 உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேபாளத்தைச் சேர்ந்த 9 பேர் கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு நேபாளத்திற்குப் புறப்பட்டனர். பீகாரின் முசாபர்நகர் மாவட்டம் மதுபானி நகரில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, அதேசாலையில் சிலர் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள்மீது மோதுவதைத் தவிர்க்க முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காரில் பய ணித்த நேபாளத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் படுகாய மடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனு மதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *