வெளிநாட்டு வேலை மோசடி விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

1 Min Read

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று சண்டிகர் தமிழ் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் சுப.இராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் தமிழர் களை ஏமாற்ற தொடர்ந்து ஊடகங்களில் போலி விளம் பரங்கள் வெளியிட்டு பணமோசடி செய்யும் போலி முகவர்கள் பஞ்சாப், மொகாலி, சண்டிகர் ஆகிய பகுதிகளில் பெருகியுள்ளனர். தமிழர்களை ஈர்த்து கனடா போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு எனப் பொய்யான உத்தரவாதம் அளித்து பெருந்தொகையை பெற்றுக்கொண்டு ஏமாற்றுவதும், கேள்வி கேட்போரை மிரட்டுவதும் தொடர் நிகழ்வுகளாகி அச்சுறுத்துகின்றன.

இவர்களிடம் பெருந்தொகையைக் கொடுத்து ஏமாந்து தவிக்கும் தமிழர்கள் மதுரை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். விமானப் பயணச்சீட்டுகளை குறைந்த கட்டணத்தில் வழங்குவதாகப் பொய்யாக அறிவித்து, ஏமாறும் தமிழர்களிடம் தொடர் வசூலில் ஈடுபடும் அவலமும் நடக்கிறது.
இவ்வகை மோசடிகள் தொடராதபடி, மதுரை உள்ளிட்ட தமிழ்நாடு மாவட்டங்களில் இனிமேலும் யாரும் ஏமாறாமல் காக்கும் வகையில் ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *