கும்பமேளாவில் பலியானவர்களில் 11 பேர் பீகார் பக்தர்கள்!

Viduthalai
1 Min Read

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 30 பேரில் 11 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல மைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி சங்கமத் திற்கு அருகிலுள்ள பகுதியில், மவுனி அமாவாசையின் ‘புனித’ நீராடுவதற்காகக் கூடியிருந்த பக்தர்களின் கூட்டம் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் மரணமான 30 பேரில், நான்கு பேர் கோபால்கஞ்சைச் சேர்ந்தவர்கள், 2 பேர் அவுரங்காபாத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாட்னா, முசாபர்பூர், சுபால், பாங்கா மற்றும் மேற்கு சம்பாரண் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என முதல்வர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த துயரச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித் துள்ள முதலமைச்சர் நிதிஷ் குமார், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவ தாக அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்த ஒவ்வொரு வருக்கும் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *