புதுடில்லி, பிப்.2- கோயில்களுக்குள் நுழைவதில் யாருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படக்கூடாது என்று வாய்மொழியாகக் கூறிய உச்சநீதி மன்றம், ஆனால் கோயில்களில் “விஅய்பி தரிசனம்” வசதி களை நிறுத்தக் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது.
கோயில்களில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு “விஅய்பி தரிசனம்” மற்றும் “முன்னுரிமை, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சிறப்பு சிகிச்சை” என கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு எதிரான பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த மனுவை விசா ரித்த உச்ச நீதிமன்றம், கோயில்களில், சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம் என அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், கோயில்களில் விஅய்பி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்யும் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரம்பு இல்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது. மேலும், கோயில்களுக்குள் நுழைவதில் யாருக்கும் சிறப்பு சலுகை வழங்கப் படக்கூடாது என்று வாய் மொழியாகக் கூறி உள்ளது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங் கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, இந்தப் பிரச்சினையை சமூகமும் கோயில் நிர்வாகமும்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறியது.
“சிறப்பு சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்று நாங்கள் கருதி னாலும், இந்த நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. அரசமைப்பின் 32ஆவது பிரிவின்கீழ் அதிகார வரம்பைப் பயன் படுத்துவது பொருத்தமான வழக்கு என்று நாங்கள் நினைக்கவில்லை.
இருப்பினும், மனு வைத் தள்ளுபடி செய் வது பொருத்தமான அதி காரிகள் தேவைக்கேற்ப பொருத்தமான நடவடிக்கை எடுப்ப தைத் தடுக்காது என்பதை நாங்கள் தெளிவுபடுத் துகிறோம்,” என்று பெஞ்ச் கூறியது.