இணையவழிக் குற்றங்கள்: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – சென்னை காவல்துறை ஆணையர் வேண்டுகோள்

2 Min Read

சென்னை, பிப். 2- சென்னை காவல்துறை ஆணையர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு பண இழப்பு ஏற்படுவதாக புதிய வகை மோசடி குறித்து சைபர் கிரைம் காவல் நிலையங்களில் புகார்கள் வருகின்றன. இந்த வகை மோசடியில் முதலில் செல்பேசிக்கு +91 5XXXXXXI போன்ற எண்களில் இருந்து 6 இலக்க (123-456) வாட்ஸ்அப் ஆக்டிவேசன் கோடு மெசேஜ் ஒன்று அனுப்பப்படும். பின்னர் அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வாட்ஸ் ஆப் மெசேஜ் மூலமாக தொடர்பு கொள்ளும் நபர், தன்னுடைய 6 இலக்க வாட்ஸ்அப் ஆக்டிவேசன் கோடு தவறுதலாக உங்களுடைய செல்பேசி எண்ணுக்கு வந்துள்ளது.

முடக்கம்
அதனை தனக்கு அனுப்பும் படியாக மெசேஜ் அனுப்புவார். அதை உண்மை என்று நம்பி பலர் தங்களுடைய செல்பேசிக்கு வந்த 6 இலக்க வாட்ஸ்அப் ஆக்டிவேசன் எண்ணை சந்தேக நபருக்கு கொடுத்து விடுகின்றனர். அவ்வாறு அடையாளம் தெரியாத நபருக்கு 6 இலக்க வாட்ஸ்அப் ஆக்டிவேசன் எண்ணை கொடுத்த உடன் சந்தேக நபர் உங்களுக்குத் தெரியாமல் உங்களுடைய செல்பேசி எண்ணை ஹேக் செய்து புதியதாக வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கை துவக்குவார். அதனால் உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கு முடக்கம் செய்யப்படும். பிறகு ஹேக் செய்யப்பட்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட்டிலிருந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நீங்கள் அனுப்புவது போன்று வாட்ஸ்ஆப் ஆக்டி வேசன் கோடு கேட்டு மெசேஜ் அனுப்பி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாட்ஸ்ஆப் கணக்குகளையும் ஹேக் செய்து விடுகின்றனர்.

எனவே இதுசம்மந்த மாக பொதுமக்கள் உஷா ராக இருக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்தியில், வாட்ஸ்ஆப் நிறுவனம் ஆக்டிவேசன் கோடு எண்ணை செல்பேசி எண் உரிமையாளர் அல்லாத பிற நபர்களின் எண்களுக்கு அனுப்ப வேண்டாம். உங்களுடைய செல்பேசி எண்ணிற்கு வரும் 6 இலக்க ஆக்டி வேசன் கோடுகளை எந்த நபருக்கும் கொடுக் காதீர்கள். சந்தேக நபர் களிடமிருந்து அழைப்புகள் வந்தால் அந்த எண்களை உடனடியாக நிராகரித்து விடும்படியாகவும் அல்லது முடக்கம் செய்யவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.

மேலும் சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதள முகவரி https:/cybercrime.gov.in-ல் புகார் தெரிவிக்கும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *