கெஜ்ரிவால் எப்போது யமுனை நதியில் நீராடுவார் என்ற வினாவை எழுப்பினார் ராகுல் காந்தி.
யமுனை நதியை சுத்தம் செய்து, அந்த நீரைக் குடிப்பேன் என்று கெஜ்ரிவால் பதில் கூறியுள்ளார்.
கேள்வி எழுப்பிய ராகுல் காந்தியும் யமுனையில் நீராடவில்லை. கெஜ்ரிவாலோ யமுனையை சுத்தம் செய்த பிறகு என்று பதில் கூறியுள்ளார்.
ஆக, யமுனை நதி குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தகுதியானதல்ல! அவ்வளவு மாசடைந்து கிடக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. கிருமிகளின் ஒட்டுமொத்த குடியிருப்பாக இருக்கிறது என்பதைத்தான், சொல்லாமல் சொல்லுகிறார்கள் என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்!