தமிழ்நாட்டில் தினசரி மின்நுகர்வு அதிகரிப்பு கடந்த மாதம் 17 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது

1 Min Read

சென்னை,பிப்.1- தமிழ்நாட்டில் தினசரி மின் நுகர்வு அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வு, தினமும் சராசரியாக காலை, மாலை, 14 ஆயிரம் மெகாவாட்; மற்ற நேரங்களில், 15 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது, கோடைக்காலத்தில் அதிகரிக்கிறது. அதன்படி, 2024 மே 2ஆம் தேதி, 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாகும். பின், மின்நுகர்வு வழக்கமான அளவுக்கு வந்தது.

கடந்த டிசம்பரில் பெய்த கனமழை காரணமாக, மின் நுகர்வு, 10 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்தது. பொதுவாக, ஜனவரியில், பனிப்பொழிவு இருக்கும் என்பதால், மின்நுகர்வு தினமும் வழக்கமான அளவிலேயே இருக்கும். அதற்கேற்ப, இம்மாதம் கடும் பனிப்பொழிவு காரணமாக, மின்நுகர்வு தினமும் சராசரியாக, 15 ஆயிரம் மெகா வாட்டாக இருந்தது.

அதிகரிப்பு

ஆனால், கடந்த சில தினங்களாக, பகலில் வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளதால், மின்நுகர்வு படிப்படியாக அதிகரித்து வருகிறது. 30.1.2025 அன்று மின் நுகர்வு, 17 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியது. அன்று மாலை, 17,114 மெகா வாட்டாக இருந்தது. இதுவே, இந்த ஆண்டில் இதுவரை உச்ச அளவு.

இதை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின் உற்பத்தி, கொள்முதல் இருந்ததால், மின் பற்றாக்குறை ஏற்படவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *