கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு நீதிக் குழு விசாரணை தொடக்கம்

1 Min Read

பிரயாக்ராஜ், பிப்.1 மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை புனித நீராடலின்போது நெரிசலில் சிக்கி 30 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மாநில அரசு அமைத்த நீதிக் குழு, பிரயாக்ராஜில் தங்களின் விசாரணையைத் தொடங் கினா்.

30 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநி லம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த மாதம் 13-ஆம் தேதி முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மவுனி அமாவாசையை முன்னிட்டு ஒரே நாளில் கோடிக்கணக்கானோர் ‘புனித நீராட’ பிரயாக் ராஜில் குவிந்தனா். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 30 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா்.

நீதி விசாரணை

நெரிசல் சம்பவத்துக்குப் பின்னணியில் உள்ள காரணங்களைக் கண்டறிய நீதி விசாரணைக்கு முதல மைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஹா்ஷ் குமார் தலைமையில் 3 நபா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஒரு மாதத்துக்குள் அறிக்கை அளிக்க நீதிக் குழுவுனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, நீதி விசாரணைக் குழுவினா் நேற்று பிரயாக்ராஜுக்கு வந்தடைந்தனா். நெரி சல் அசம்பாவிதம் குறித்து தொடா்புடைய அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்திய குழு, சம்பவ இடத்தையும் நேரில் பார்வையிட்டனா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தா்களையும் சந்தித்து அவா்கள் விசாரணை மேற்கொண்டனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *