பெண்கள் பாதுகாப்புக்கு செயலியுடன் இணைந்த காலணி-மாணவர்கள் சாதனை

viduthalai
1 Min Read

லக்னோ, ஜன.31- பெண்களின் பாதுகாப் புக்கு எஸ்ஓஎஸ் எச்ச ரிக்கை அனுப்பும் வகையில் காலணி ஒன்றை உத்தரப் பிரதேச மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். பெண்களின் பாதுகாப் புக்கு கடந்த 20 ஆண்டு களில் பெப்பர் ஸ்பிரே, ரேப் விஷில், டாக்சியில் எஸ்ஓஎஸ் பட்டன் என ஏராளமான பாதுகாப்பு பொருட்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. தற்போது புதுமை கண்டுபிடிப்பாக பாது காப்பு அம்சத்துடன் கூடிய செருப்பை பள்ளி மாணவர்கள் உருவாக்கி யுள்ளனர்.

மாணவர்கள்

உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கன்ஜ் மாவட்டத்தில் உள்ள ஆர்பிஅய்சி பள்ளியில் பயிலும் அம்ரித் திவாரி, கோமல் ஜெய்ஸ்வால் என்ற மாணவர்கள் இந்த காலணியை தயாரித்து உள்ளனர்.

அலைபேசி செயலி

இந்த காலணி அலை பேசி செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப் புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், இந்த செருப் பின் அடியில் உள்ள பட் டனை அழுத்தினால் போதும், அது எஸ்ஓஎஸ் எச்சரிக்கையை குடும்பத் தினர், நண்பர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களின் அலைபேசிக்கு அனுப்பி விடும். இந்த எச்சரிக்கை மூலம் காலணி அணிந்திருப்பவரின் இருப்பிடத்தை கண்டறிய முடியும். இதில் உள்ள ஒலிவாங்கி மூலம் காலணி அணிந்திருப்பவரின் இடத்தில் நடைபெறும் உரையாடல்களை கேட்க முடியும். இந்த காலணியால் வைத்து தாக்குதல் நடத்துபவரை மிதித்தால், அதில் இருந்து பாயும் மின்சாரம் தாக்குதல் நடத்துபவரை நிலைகுலைய செய்யும். அதே நேரத்தில் அணிந் திருப்பவருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

எச்சரிக்கை தகவல்

இந்த காலணி குறித்து இதை தயாரித்த மாணவர்கள் கூறுகையில், “நாங்கள் உருவாக்கிய செயலி, காலணியில் இருந்து அலைபேசிக்கு எச்சரிக்கை தகவல் அளிக்கும் தொழில் நுட்பத்தை இணைக்கிறது. காலணியில் கேமிராவை பொருத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் காலணி அணிந்திருப்பவரை சுற்றி என்ன நடைபெறுகிறது என்பதை அறியலாம். பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்தே இந்த காலணியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *