கழகக் களத்தில்…!

2 Min Read

31.1.2025 வெள்ளிக்கிழமை வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி- மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 6 மணி*இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: நாத்திக பொன்முடி (மாநில கழக இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: வ.தமிழ்ச்செல்வன் (இளைஞரணி * பொருள்: பிப்ரவரி 9இல் தமிழர் தலைவர் பங்கேற்கும் வடசென்னை, கொளத்தூர் 80 அடி சாலை ஏ.எம்.பி.எஸ்.அரங்கத்தில் நடைபெறவுள்ள பெரியாரியல் பயற்சிப் பட்டறை குறித்தும் கழக ஆக்கப் பணிகள் பற்றியும் கலந்துரையாடப்படும். * நன்றியுரை: சஞ்சய் (மாவணவர் கழகம்) * விழைவு: மாவட்ட கழக இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்கவும் * அழைப்பு: ப.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)

1.2.2025 சனிக்கிழமை
விருதுநகர், இராசபாளையம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

விருதுநகர்: காலை 11 மணி *இடம்: பொன்மேனி அரங்கம், கருப்பசாமி நகர், பேராலி சாலை, விருதுநகர்* தலைமை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர், இராசபாளையம்) * முன்னிலை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்ட தலைவர்), பா.அசோக் (இராசை மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ச.சுந்தரமூர்த்தி (மாவட்ட துணைச் செயலாளர்) * சிறப்புரை:
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்கள் இராசபாளையம் வருகை (26.2.2025) மற்றும் அமைப்புப் பணிகள் செயல் திட்டங்கள் * நன்றியுரை: இரா.அழகர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * விழைவு: மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம் * அழைப்பு: இரா.கோவிந்தன் (இராசை மாவட்ட செயலாளர்), விடுதலை தி.ஆதவன் (விருதுநகர் மாவட்ட செயலாளர்).

2.2.2025 ஞாயிற்றுக்கிழமை
வீடுதோறும் தோழர்கள் சந்திப்பு

2.2.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வீடுதோறும் தோழர்களை சந்திக்க வருகை தரவுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அன்புடன்: க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), செகதை ச.குமார் (மாவட்ட செயலாளர்)
திராவிடர் கழகம், அறந்தாங்கி மாவட்டம்.

தாம்பரம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

தாம்பரம்: மாலை 5 மணி * இடம்: தாம்பரம் பெரியார் புத்தக நிலையம் *தலைமை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: தி.இர.சிவசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்) சிறப்புரை: வீ.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ப.முத்தையன் (மாவட்டத் தலைவர்), கோ.நாத்திகன் (மாவட்டச் செயலாளர்) * நன்றியுரை: கரமா நகர் தே.சுரேஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * திராவிடர் கழக இளைஞரணி தாம்பரம் மாவட்டம் *பொருள்: கழக இளைஞரணி கட்டமைத்தல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *