கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன்
மாமியார் லீலாவதி நாராயணசாமி இறுதி நிகழ்ச்சி!
வடலூர்,ஜன.31- வடலூர் ஓய்வு பெற்ற அஞ்சலக அதிகாரி கே.வி. நாராயணசாமி வாழ்விணையர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மாமியார் லீலாவதி நாராயணசாமி (வயது 95) 27.1.2025 அன்று காலை 6.30 மணிக்கு மறைவுற்றார். அவரின் கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு உடனடியாக வழங்கப்பட்டது.
அனைத்துக் கட்சி சார்பில் வீரவணக்கம்
அவரின் உடலுக்கு கழக கொடி போர்த்தப்பட்டு கடலூர் மாவட்ட திராவிடர் கழகம், திமுக, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மாலையிட்டு வீரவணக்கம் தெரிவிக்கப்பட்டது
திமுக ஒன்றிய செயலாளர் பொறி யாளர் சிவகுமார், நகர செயலாளர் தன.தமிழ்ச்செல்வன், நகராட்சி தலைவர் சிவக்குமார் மற்றும் ஏராளமான திமுக வினர் மாலை வைத்து மரியாதை செய்தனர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வழக்குரைஞர் சந்திரசேகரன் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். உறவினர்கள் சார்பில் மருமகள் மேகலா, சேலம் மோகன் பாபு, தேன்மொழி, கோபி சேத்ரபாலன், சென்னை வெங்கட்ராஜ் திருச்சி முத்துராஜ், மாநில கழக ஒருங் கிணைப்பாளர் தஞ்சை ஜெயக்குமார், குடந்தை மாவட்ட கழக தலைவர் நிம்மதி, குடந்தை செல்வரசன், தஞ்சை வெற்றி செல்வன் ஆகியோரும் மாலையிட்டு இறுதி மரியாதை செலுத்தினர். மாலை 4 மணி அளவில் இரங்கல் கூட்டம் மாவட்ட கல்வி குழு தலைவர் வி.சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. அமெரிக்கா மேகலா, கோபிசெட்டிபாளையம் சேத்திர பாலன், சேலம் மோகன் பாபு, கனி மற்றும் கொடைதான இயக்குநர் சிதம்பரம் ராமச்சந்திரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட காப்பாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர் யாழ் திலீபன், புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனை குழு உறுப்பினர் மு.பாலகுருசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிந்தனைச் செல்வன், அரியலூர் மாவட்ட தலைவர் நீலமேகம், ஜெயங்கொண்டம் காமராஜ், திண்டிவனம் பரிதி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் பரணிதரன், விருத்தாசலம் மாவட்ட தலைவர் இளந்திரையன், மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், அரியலூர் மாவட்ட செயலாளர் கோபால், புதுவை மாவட்ட தலைவர் அன்பரசன், செயலாளர் சிவராஜன், அறிவழகன், கடலூர் மாவட்ட செயலாளர் எழிலேந்தி, சிதம்பரம் மாவட்ட தலைவர் பூ.சி. இளங்கோவன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தம்பி பிரபாகரன், வேலு, திண்டிவனம் மாவட்ட தலைவர் அன்பழகன், செயலாளர் பரிதி, காப்பாளர் பரந்தாமன், கடலூர் மாவட்ட கழக காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினார்கள்.
லலிதாம்பிகை மருத்துவ கல்லூரிக்கு உடற்கொடை
சென்னை லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மறைந்த லீலாவதியின் உடல் ‘உடற்கொடை’யாக வழங்கப்பட்டது. முன்னதாக ஊர்வல மாக மறைந்த அம்மையாரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கழக தோழர்கள் புலவர் ராவணன், திராவிடன் சி.மணிவேல், நா. உதயசங்கர், நா.பஞ்சமூர்த்தி, செந்தில் வேல், தங்க பாஸ்கர், கோ.இந்திரஜித், கிராம முத்தையன், இராம.முருகன், தர்மலிங்கம், ஆடூர் கனகராஜ், தமிழேந்தி, தென்.சிவகுமார், பெரியார் செல்வம், அறம் விஸ்வநாதன், சூரியனார் கோயில் மூர்த்தி, கடலூர் சின்னதுரை, மனகுப்பம் தர்மன், மறுவாய் சேகர், தீனா மோகன், மருவாய் திருநாவுக்கரசு, அனைத்து பாஸ்கர், வேணுகோபால், கதிர்வேல், கட்டியங்குப்பம் சேகர், டிஜிட்டல் ராமநாதன், பெருமாள், வழக்குரைஞர் வனராசு, புனிதன், நவீனா, சாம்பசிவம் ஆகியோரும் திண்டிவனம் வில்லவன் கோதை, பெருமாள், சிவராமன் வளவனூர், மாறன் வளவனூர் ஆகி யோரும் அரியலூர் மாவட்டம் தமிழ் சேகரன், வழக்குரைஞர் ராஜா, அண்ணாமலை, தியாக முருகன், தமிழரசன், கார்த்திகேயன், ரத்தின ராமச்சந்திரன், முத்தமிழ் செல்வன், தங்க சிவமூர்த்தி, மீன்சுருட்டி அசோகன், திலீபன், சிவக்கொழுந்து, சம்போடை ராஜேந்திரன் ஆகியோரும் புதுவை கழக தோழர்கள் ரஞ்சித் குமார், சடகோபன், தியாகு, முத்தமிழ்செல்வன், சிவராஜன், கிருஷ்ணசாமி, ஆறுமுகம், அறிவழகன், குமார் ஆகியோரும் விருத்தாசலம் ராமராஜ், சிலம்பரசன், பெரியார் மணி, சிதம்பரம் மாவட்ட செயலாளர் திலீபன், மழவை பெரியார் தாசன், செல்வரத்தினம், புவனகிரி இராமலிங்கம், அர வீரமணி, ஆண்டிபாளையம் முருகன், குணசேகரன், மஞ்ச குளி ஜெயபால், ஸ்டாலின் தர்மா ஆகியோரும் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் நடையாளர் கழகத்தைச் சேர்ந்த வள்ளி மணாளன், சக்கரவர்த்தி, பாஸ்கர், வேல்முருகன், நடராஜன், ஞான சங்கர் ஆகியோரும் பங்கேற்று வீரவணக்கம் முழக்கமிட்டு சென்றனர். வடலூர் சபை பேருந்து நிறுத்தம் அருகில் உடற்கொடை வழங்கப்பட்டது.