தலைநகர் டில்லியில் கடும் குளிரால் கடந்த 56 நாட்களில் சுமார் 474 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதுதொடர்பாக டில்லி தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.