கங்கையில் நீராடினால் வறுமையை ஒழிக்க முடியுமா?

1 Min Read

காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி

போபால், ஜூன். 29 உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் கும்ப மேளாவில் கோடிக் கணக்கானோர் புனித நீராடி வரும் நிலையில், அரசியல் தலைவர்களும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ‘புனித’ நீராடியுள்ளனர்.

வறுமை ஒழியுமா?
பாஜக தலைவர்கள் மகா கும்ப மேளாவில் புனித நீராடுவதை விமர்சிக்கும் வகையில், கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வியெழுப்பியுள்ளார். மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்துகொண்ட மல்லிகார்ஜுன கார்கே, அதன் பின்னர் இது தொடர்பாக பேசியதாவது;

கங்கையில் நீராடல்
“நரேந்திர மோடி யின் பொய்யான வாக் குறுதிகளின் வலையில் சிக்காதீர்கள். கங்கையில் நீராடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா? அது உங்கள் வயிற்றை நிரப்புமா? நான் யாருடைய நம்பிக்கையை எதிர்த்தும் கேள்வி கேட்க விரும்பவில்லை. யாராவது மோசமாக உணர்ந்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால், ஒரு குழந்தை பசியால் இறக்கும் சூழலில், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் நேரத்தில், தொழிலாளர்கள் தங்கள் நிலுவைத் தொகையைப் பெறாமல் இருக்கும் நேரத்தில், இங்கு கோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவழித்து கங்கையில் நீராடப் போட்டி போடுகிறார்கள்.

நிழற்படக் கருவியில் நன்றாகத் தெரியும் வரை அவர்கள் (பாஜக வினர்) தொடர்ந்து நீரா டிக்கொண்டே இருக் கிறார்கள். அத்தகை யவர்களால் நாட்டிற்கு நன்மை செய்ய முடி யாது. மதத்தின் பெய ரால் ஏழைகள் சுரண் டப்படுகிறார்கள். இதுவே எங்களுக்குப் பிரச் சினையாக உள்ளது.” இவ் வாறு கார்கே கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *