புதுடில்லி, ஜன. 29- வக்ஃப் மசோதா விவகாரத்தில் ஆளும் கூட்டணியின் திருத்தங்களை மட்டும் ஏற்கச் செய்து, எதிா்க் கட்சிகள் முன்மொழிந்த திருத்தங்களை நிராகரித் துள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் செயலுக்கு எதிர்க் கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
இது தொடா்பாக ஜேபிசியில் இடம் பெற்ற எதிர்க்கட்சிகளின் உறுப்பினா்கள் ஆ.ராசா, கல்யாண், கவுரவ் கோகாய், அசாதுதீன் ஒவைசி, டாக்டா் சையது ஹுசைன், மொஹிபுல்லா, இம்ரான் மசூத், எம்.எம். அப்துல்லா, டாக்டா் மொஹம்மத் ஹாவேத், அரவிந்த் சவந்த், முகம்மது நடிமுல் ஹக் ஆகியோர் 27.1.2025 அன்று மாலையில் கூட்டாக அறிக்கை வெளியிட்டு தங்களுடைய அதிருப்தியை பதிவு செய்துள்ளனா்.
அதில், ‘தாங்கள் இடம்பெற்ற ஜேபிசி விசாரணையின் போது கருத்துகளைப் பதிவு செய்ய ஆஜரானவா்களில் கிட்டத்தட்ட 95 சதவீதம் போ் மசோதாவுக்கு எதிராகப் பேசியவா்கள். எஞ்சிய அய்ந்து சத வீதத்தினா் சமுதாய அடையாளத்துடனோ ஒரே நோக்கத்துடனோ வந்தவா்கள்’ என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்து பின்னா் செய்தியாளா்களிடம் விவரித்த ஆ. ராசா, ‘ஆளும் கூட்டணி உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்களின்படி நீண்ட காலமாக எந்தெந்த சொத்துகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லையோ அவற்றை எல்லாம் அரசுடைமையாக்கலாம் என உள்ளது.
அப்படியென்றால், இன்றைய நிலையில் 60 சதவீத இஸ்லாமியா்களின் சொத்துகளுக்கு ஆவணங்கள் இருக்காது. அதை எந்தவொரு ஹிந்துவோ, அரசோ வேறு எவரோ கேள்வி எழுப்பாத நிலையில், அந்தச் சொத்துகளை அபகரிப்பதே திருத்த மசோதாவின் நோக்கமாக உள்ளது.
டில்லி சட்டப் பேரவைக்கு பிப். 5-இல் தோ்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்று இஸ்லாமி யா்களுக்கு எதிரான வாக்குகளை ஈா்ப்பதே ஆளும் கூட்டணியின் திட்டம்’ என்றார்.