பக்தியாம், புடலங்காயாம்! காசு கொடுத்து அடிவாங்கி ஆசீர்வாதம் பெறும் கூட்டம்

Viduthalai
0 Min Read

கும்பமேளாவில் பல கூத்துகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.
இதில் சாட்டை அடி சாமியார் என்று ஒருவர் கும்பமேளாவில் போவோர் வருவோரை எலலாம் சாட்டை மற்றும் பிரம்பால் வெளுத்து வாங்குகிறார்.

இவர் ரூத்ரபிரயாக் என்ற இடத்தில் 70 ஆண்டுகளாக தவமிருந்தவராம். இவர் கையில் அடி வாங்கினால் ‘புண்ணியம்‘ என்று, யாரோ புரளியைக் கிளப்பி விட, இவர் இருக்கும் இடத்திற்குச் சென்று அடி வாங்குகின்றனர்.
வரும் கூட்டத்தைக் கண்டு வெறுத்துப் போன இவர் கையில் கிடைத்ததைக் கொண்டு அடிக்க ஆரம்பித்துவிட்டார். அடிவாங்கிய வலியோடு காணிக்கைகளைப் போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *