அகப்பட்டார் சாமியார் ராம்தேவ்!

Viduthalai
1 Min Read

பாலக்காடு, ஜன.28 ஆட்சேபனைக்குரிய விளம்ப ரங்களை வெளியிட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் பாபா ராம்தேவ், ஆச்சார்யா பால கிருஷ்ணாவிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் அவரது பதஞ்சலி நிறுவனம் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது. ஆட்சேபனைக்குரிய விளம்பரங்களை வெளியிட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால், பிணையில் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து கேரள மாநிலம், பாலக்காடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி பாபா ராம் தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆதாரமற்ற கூற்றுகள்
ஆதாரமற்ற கூற்றுகளுடன் கூடிய விளம்பரங்களை வெளியிட்டு பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்வதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக, தங்கள் நிறுவனத்தின் பொருட்கள் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் கோவிட் தொற்று ஆகியவற்றை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதற்கான விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டும் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆஜராகாததால், வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை பிப்ரவர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்குகள் ஏற்கெனவே பதஞ்சலி மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலம், கோழிக்கோடு, உத்தரகாண்டில் உள்ள அரித்துவார் ஆகிய இடங்களிலும் பாபா ராம்தேவ் மற்றும் அவரது குழுவினருக்கு எதி ராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கேரளாவில் மட்டும் குறைந்தபட்சம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் கோழிக்கோட்டில் 4 வழக்குகள், பாலக்காட்டில் 3 வழக்குகள், எர்ணாகுளத்தில் 2 வழக்குகள் மற்றும் திருவனந்தபுரத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல விசாரணைகளில் பாபா ராம் தேவ் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *