போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம் ஏஅய்சிடிஇ

1 Min Read

புதுடில்லி, ஜன.27 அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஅய்சிடிஇ) பெயரில் அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஏஅய்சிடிஇ துணை இயக்குநா் பிரசாந்த் காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை:

ஏஅய்சிடிஇ மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சகம் சாா்பில் பல்வேறு பணியிடங்களுக்கு பணி நியமனக் கடிதங்கள், அது தொடா்பான தகவல் தொடா்புகளில் மோசடி நடப்பது கவனத்துக்கு வந்துள்ளது. இந்த வகையான மோசடிகள் போலி மின்னஞ்சல் முகவரி, ஆவணங்கள், ஆள்மாறாட்டம் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பாதிக்கப்படு வோா் பணத்தை இழக்க நேரிடுகிறது. அதே வேளையில், அது ஏஅய்சிடிஇ-இன் நற் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, தொழில்நுட் பக் கல்வி நிறுவனங்கள் இந்த மோசடி குறித்து அனைத்து மாணவா்கள், ஆசிரியா்கள், ஊழியா்களுக் குத் தெரியப்படுத்தி, விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *