தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே வயது, இடஒதுக்கீடு சான்றிதழ்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய யுபிஎஸ்சி (UPSC) உத்தரவிடப் பட்டுள்ளது. இதற்கு முன்னர், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகுதான் இந்த ஆவணங்கள் பெறப்பட்டு வந்தன. ஆனால், போலி ஆணவத்தால் சிக்கிய மேனாள் IAS பூஜா கேத்கர் பிரச்சினையை தொடர்ந்து இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 979 காலிப் பணியிடங்களுக்கு கடந்த 22ஆம் தேதி முதல் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.