ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமனின் வாழ்விணையர் தோழர் சுசிலா உடல் நலம் குன்றி தீவிர சிகிச்சைக்குப் பின் நலம் பெற்று ஓய்வில் இருக்கின்றார். அவரை ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், துணைத் தலைவர் மு.ரகுபதி, துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெயராமன், கன்னடபாளையம் தமிழரசன் ஆகியோர் 24.1.2025 அன்று இரவு 7.00 மணிக்கு அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தனர்.