26.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஆளுநர் விருந்து: முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் புறக்கணிப்பு. தமிழ்நாடு முதலமைச்சர் டங்க்ஸ்டன் ரத்துக்காக அரிக்காபட்டி போராட்ட குழுவினர் நடத்தும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள மதுரை செல்கிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர் விஜயசாய் (ரெட்டி) மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவி விலகலை சமர்ப்பித்ததாக விஜயசாய் (ரெட்டி) தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராப்:
* உ.பி. யோகி அரசின் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்பது ‘ஒரு டிரில்லியன் பொய்’. மாநிலத்தில் வேலையின்மை அதிகரித்து வருவதாகவும், விவசாயிகள், தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் கவலைப்படுவதாகவும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கண்டனம்.
டெக்கான் ஹெரால்ட்:
* வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு வேண்டும், உத்தவ் வேண்டுகோள். இனி வாக்களிப்பதில் எந்த மதிப்பும் இல்லை என்று தாக்கரே கூறினார், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சிதைக்க முடியுமா இல்லையா என்பது ஒரு தொழில்நுட்பக் கேள்வி, ஆனால் அனைத்து நிறுவனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நாட்டின் சுதந்திரம் இப்போது சுதந்திரப் போராட்டத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களின் கைகளில் உள்ளது என காட்டம்.
.- குடந்தை கருணா