பெரியார் பாலிடெக்னிக்கில் ‘சென்னை இந்தியா யமஹா நிறுவனம்’ நடத்திய வளாக நேர்காணல்

1 Min Read

வல்லம், ஜன. 26- பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியில் சென்னை இந்தியா யமஹா நிறுவனம் சார்பாக நேர்காணல் நடைபெற்றது. வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற கம்பெனிகளை வரவழைத்து வளாக நேர்காணல் மூலம் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
24.01.2025 அன்று சென்னை இந்தியா யமஹா நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் அருண் இப்பாலிடெக்னிக்கில் நடைபெற்ற வளாக நேர்காண லில் கலந்து கொண்டு 60 மாணவர்களை பணிக்கு தேர்ந்தெடுத்தார்கள். பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் இக்கல்லூரியின் துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *