திராவிடர் கழக வழக்குரைஞரணியின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (மதுரை)

2 Min Read

மதுரை, ஜன. 25- மதுரை தல்லாகுளம் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி தொல்காப்பியர் அரங்கத்தில் 25-01-2025 சனி காலை 10.00 மணி அளவில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கழக வழக்குரைஞரணி சார்பில் நடைபெற்றது.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் தலைமை ஏற்று உரையாற்றினார். கழக வழக்குரைஞரணி துணை செயலாளர் வழக்குரைஞர் கணேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

வழக்குரைஞரணி மாநில இணைச் செயலாளர் வழக்குரைஞர் வீரமரத்தினி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மதுரை வே.செல்வம், தே.எடிசன்ராஜா, வழக்குரைஞரணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் ராஜசேகரன் மதுரை மாவட்ட தலைவர் முருகானந்தம் மாவட்ட செயலாளர் ரா.லி.சுரேஷ் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் எரிமலை மதுரை ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

கழக வழக்குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் மு. சித்தார்த்தன் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார். பகுத் தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மா.அழகிரி சாமி தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் முதல் வகுப்பினை நடத்தினார்.

சமூக நீதி வரலாறு என்ற தலைப் பில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு வகுப்பெடுத்தார். இந்திய அரசியல் சட்டமும் அறநிலை யத்துறை சட்டமும் என்ற தலைப்பிலும் பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள் என்ற தலைப்பிலும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி வகுப்பெடுத்தார். பெரியார் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி என்ற தலைப்பில் கழக துணை பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வகுப்படுத்தார்.

பேய் ஆடுதல் சாமி ஆடுதல் ஒரு அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் மருத்துவர் இரா. கவுதமன் வகுப்பெடுத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் நம். சீனிவாசன் வகுப்பெடுத்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரை காணொலியில் ஒளிபரப்பப்பட்டது.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பாராட்டுரை வழங்கி பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைத்து நடத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *