சேலம், ஜன. 25- சேலத்தில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.500 கோடி அளவில் வசூலித்த பா.ஜ. பெண் பிரமுகர் உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
பண மோசடி
சேலம் அம்மாபேட்டை ஆத்தூர் மெயின்ரோட்டில் சிவகாமி திருமண மண்டபம் இருக்கிறது. கடந்த ஓராண்டிற்கு முன்பு வேலூரைச்சேர்ந்த விஜயாபானு (55), என்பவர் இந்த திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் அலுவலகத்தை திறந்து செயல்படுத்தி வந்தார்.
அங்கு அவர் நூதன முறையில் பணம் இரட்டிப்பு மோசடி செய்து வந்தார். இவ்வாறு மோசடி செய்ததன் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.500 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உளவுப்பிரிவு காவல்துறையினருக்கு புகார்கள் வந்ததையடுத்து ரகசிய விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பொதுமக்களிடம் பணம் இரட்டிப்பு என்ற பெயரில் பெரும் மோசடிக்கும்பல் ஒன்று பாஜக பிரமுகர் தலைமையில் செயல்பட்டு வருவது தெரிய வந்தது.
பா.ஜ.க. பெண்
இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான 10 காவல் துறையினர், அந்த திருமண மண்டபத்திற்கு சென்றனர். அப்போது அங்கு பெருமளவில் பண பரிவர்த்தனை நடந்து கொண்டிருந்தது. அவர்களை சுற்றிவளைத்த காவல்துறையினர் அக்காட்சிகளை படம் பிடித் தனர். ஏற்கெனவே அங்கே குண் டர்களை வேலைக்கு வைத்திருந்த பாஜக பெண் பிரமுகர் குண்டர்களிடம் தாக்குதல் நடத்த கூறியதும் உயரதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் உள்ளிட்டோர் மீது தாக்குல் நடத்தினர். இதுகுறித்து உடனடியாக மாநகர காவல் ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து துணை ஆணையர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மண்டபத்திற்கு விரைந்து அதிரடியாக உள்ளே நுழைந்து காவல்துறையினரைத் தாக்கியவர்களை தனிமைப்படுத்தி விசாரணை நடத்தினர். பின்னர், அறக்கட்டளை தலைவரான அம்மாபேட்டை புதுத்தெருவை சேர்ந்த விஜயாபானு (48), உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். .மேலும் திருமண மண்டபத்தில் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது.
ரூ. 2 கோடி
இதில் ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.2 கோடி வசூலானது தெரியவந்தது. அதனை நீதிபதியிடம் அனுமதி பெற்றுவந்து, வங்கி அதிகாரிகளை வர வைத்து எண்ணும் பணி நடந்தது. முதற்கட்ட விசாரணையில் அறக்கட்டளையை நடத்தி வந்த விஜயாபானு, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது வேலூர் மாவட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். அதில் அவர் தோல்வியடைந்தார்
இதுகுறித்த தகவல் கிடைத்தும், பணம் கட்டியவர்கள் மண்டபத்தை முற்றுகையிட்டு கண்ணீர் வடித்தனர். பணம் கட்டியவர்கள் மண்டபத்தை சுற்றி சுற்றியே வந்தவண்ணம் இருந்தனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
குப்பைத் தொட்டியில் கட்டுக்கட்டாக பணம்
காவல்துறையினர் நடத் திய திடீர் ஆய்வில், மண்டப கழிப்பறையில் கட்டுக்கட்டாக பணம் கிடந்ததை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந் தனர். குப்பைத் தொட்டிகளில் ரூ.12 லட்சம், ரூ.10 லட்சம் கிடந்தது. இதுதவிர 4 பெரிய பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இவை ரூ.2 கோடியை தாண்டும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.