2019ஆம் ஆண்டு சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப் பால் நடத்தப்பட்ட திருக்குறள் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார். அவரது உரையில் பேராசிரியர் ஜோஷியின் கருத்தை மேற்கோள் காட்டிப் பேசும்போது, பார்ப்பனியத்தின் உத்தியாகப் பின்வரும் கருத்துகளைக் கூறினார்.
“Appreciate – முதலில் அழிக்க வேண்டியதைப் பாராட்டுவதாகப் புகழ்ந்து சொல். Accept – அதை ஏற்றுக் கொண்டதாகக் காட்டிக் கொள். Annihilate அதை அழித்துவிடு, ஒழித்துவிடு.
எதனை எதிர்த்து அழிக்க முடியாதோ, அதை அணைத்து அழிக்கலாம் என்பதற்கு ஆதாரமாகத்தான் இன்றைக்கும் திருக்குறளைப் பார்ப்பனியம், ஆரியம் பயன்படுத்துகிறது என்றார் ஆசிரியர். (‘விடுதலை’, 14.08.2019).
திருக்குறளைச் ஸநாதனத்தில் செரித்துவிட வேண்டும் என்ற முயற்சி, கோல்வால்கரின் காலத்திலிருந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கோல்வால்கர் அவருடைய Bunch of thoughts நூலில் Thiruck kural is purely a text propounding grand in a Chaste (U656 112). Hindu Hindu thoughts Hindu language” என்கிறார்.
அதாவது, திருக்குறள் இந்து சிந்தனைகளை முன் வைக்கும் இந்து நூல் என்றார் கோல்வால்கர்.
இதன் தொடர்ச்சியாகவே திருவள்ளு வருக்குக் காவியுடை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநரின் செயல்பாடு, உண்மையில் அது மரியாதை அன்று, அவமரியாதையே.
தான் பதவியேற்ற நாள் முதல், திராவிடம் குறித்தும், தமிழ்நாடு குறித்தும் தொடர்ந்து. தவறான, அவதூறான கருத்துகளைப் பரப்புரை செய்து வருகிறார் ஆளுநர் ஆர் என்.ரவி, ஆளுநரின் அதிகாரப்பூர்வ X (எக்ஸ்) சமூக வலைத்தளப் பக்கத்தில், ‘திராவிட மாடல்’ என்பது expired ideology என்பதை முதல் பதிவாக வைத்துள்ள ஆளுநருக்கு எத்தனை வன்மம் இருக்கக் கூடும்?
சரி, இப்பிரச்சினைக்குக் தீர்வுதான் என்ன? தந்தை பெரியார் முன்வைத்த வழியில் போராடுவதே இப்பிரச்சினைக்கான தீர்வு. அது, ஆளுநர் பதவியை அகற்றுவதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்தம். ஆளுநர் ஆர்.என்.ரவியை அகற்ற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அது நிரந்தரத் தீர்வாக இருக்க முடியாது. இந்த ஆளுநர் போய்விட்டால் வேறுஒருவர் வந்து இந்த வேலைகளைச் செய்ய மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இயங்குகின்றபோது, அந்த அரசை நியமிக்கப்பட்ட பதவி மூலம் கட்டுப்படுத்துவது எப்படி ஜனநாயகமாகும்? அதுவும் இந்த மண்ணிற்கும், மக்களுக்கும் தொடர்பில்லாத வேற்று மாநிலத்தவர் ஒருவர் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு களைப் புரிந்து கொண்டு எப்படி இயங்க முடியும்?
ஆளுநர் என்னும் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு, பெரும் பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராகப் பேசிக் கொண்டும், சட்டப்பேரவை நிறைவேற்றும் சட்ட வரைவுகளுக்குக் கையொப்பம் இடாமல் காலம் தாழ்த்திக் கொண்டும், நிர்வாகத்தை முடக்கும் ஒருவருக்கு, கோடி கோடியாக மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்!
ஆங்கிலேயர் ஆட்சியின் எச்சமாகவும், இந்திய தேசியத்தினைத் திணிக்கும் நோக்கிலும் ஏற்படுத்தப்பட்ட இப்பதவியை நீக்குவதே இதற்கான ஒரே தீர்வு. மாநில சுயாட்சியைத் தொடர்ந்து முன்னிறுத்தும் திராவிட முன்னேற்றக் கழகம் இப்பிரச்சினையைத் தமிழ்நாட்டிற்கு வெளியே கொண்டு சென்று, இந்த கருத்தினை உருவாக்க வேண்டும். அப்போதுதான், அரசமைப்பில் உள்ள ஆளுநர் பதவியை அகற்றுவதற்கான திருத்தத்தைக் கொண்டு வர இயலும். இம்முயற்சியை முன் எடுப்பது காலத்தின் கட்டாயம்.